Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

Back Open Saree Blouse

பொதுவாக நாம் தைக்கும் Front Open Saree Blouse ஐ பார்க்கிலும் Back Open Saree Blouse தான் Designer Sareeக்கு மிகவும் அoகாக இருக்கும். ஏனெனில் எல்லா Designer Sareeக்கும் Chest பகுதியில் வேலைப்பாடு இருப்பதில்லை. எனவே Front Open Saree Blouse இருந்தால் Hang பண்ணி உடுத்தும் போது Front Open Saree Blouse இன் Open பகுதி தெரிவது அந்தரமாக இருக்கும் . இதற்கு Back Open Saree Blouse நன்றாக இருக்கும்.

ரீதிகௌளை

திரையிசையில் மோகனம், கல்யாணி, ஹிந்தோளம் போன்ற ராகங்களைப் போன்று அல்லாமல் இந்த ரீதிகௌளையில் குறைந்தளவு பாடல்களே வந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் ரீதிகௌளை ராகத்தில் வெளிவந்த மிகவும் பிரபலமான பாடல்

சுப்பிரமணிய புரம் - கண்கள் இரெண்டால் பாடல்

இது மிகவும் அருமையானா ராகம் . கர்நாடக சங்கீதத்தில் ரீதிகௌளை ராகம் ஒரு ஜன்னிய ராகமாகும். ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இரகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.

முதல்வன் படத்தில் அழகான ராட்சசியே பாடல்.....

ரீதிகௌளை ராகம் மேளகர்த்தா ராகங்களில் ஒன்றான கரகரபிரியா ராகத்திலிருந்து பிறந்த சேய்ராகங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. எந்த நேரத்திலும் ரசிக்ககூடிய தன்மை கொண்டதாக காணப்படுகிள்றது இந்த ரீதிகௌளை ராகம்.

தம்பி - சுடும நிலவு சுடாத சூரியன்.......

பூந்தோட்டம் படம்- மீட்டாத ஒரு வீணை.....

ஒரு ஓடை நதியாகிறது படத்தில் தலையை குனியும் தாமரையே.......

பாடலும் காட்சியும் வேறு

இது எனது இன்னுமொரு முயற்சி.. ராஜா படத்தின் "ஒரு பௌர்ணமி நிலவு"பாடல் காட்சிக்கு மஜா திரைப்பட "சொல்லித்தரவா" பாடல் இணைந்துள்ளது....விக்ரம் மற்றும் அசின் ஆகியோரின் இடத்தில் அஜித் மற்றும் ஜோ....

பாடலும் காட்சியும் வித்தியாசமாக இணைந்தால்...

பாடல்களையும் காட்சிகளையும் வித்தியாசமாக இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தின் ஒரு வடிவம் தான் இது. அன்பே அன்பே கொல்லாதே என்ற அழகிய இனிமையான பாடல் ஏய் மாண்புறு மங்கையுடன் இணைந்திருக்கின்றது. இது எனது சிறிய முயற்சி......



லவாசா (LAVASA)

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் திட்டமிட்டு உருவாகிக் கொண்டிருக்கும் முதல் மலை நகரமாக புனே அருகில் உள்ள  லவாசா (LAVASA)  கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நகரம் Hindustan Construction Company மூலம் உருவாகி வருகிறது. 2002 ம் ஆண்டு தொடங்கப்பெற்ற இந்த நகரம் 2021 ம்ஆண்டு முழுமை அடையும் என திட்டமிடப் பட்டுள்ளது.

ஏழு மலை தொடரில், 12 நகரங்கள், 25,000 acres (100 km2) பரப்பளவில் அமைய இருக்கின்றன. நான்கு நிலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. முதல் நிலை 2010 டிசம்பருக்குள் முடிய இருக்கிறது. புனேயிலிருந்து 50 கிமீ, மற்றும் மும்பையிலிருந்து 180 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

இந்த நகரங்களில் Apollo Hospitals, Hotels and convention centres, University, Symbiosis Education, Hotels Institute of International Business Relations, Education, National School of Hotel Management, Germany, Millenium school education, Spaceworld theme park over 65 acres , Nick Faldo golf academy, Manchester City - Football academy, Hockey Australia - Hockey academy, MGM Studios. என்பன அமைக்கப் பட்டு வருகிறது.




மைனா

பறவைகளில் ஒன்று மைனா..இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்திய திரைப்படங்களிலும் தரமான படங்களில் ஒன்று மைனா என்பது படத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். மிகத் தரமான படம். உண்மையில் சாதாரண ஒரு கதைதான் ஆனால் அந்த கதையை சிறப்பாக எடுத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. என்னடா படம் நன்றாக இருக்குது என்று சொல்லிட்டு சிறப்பா நடிக்கேல என்று சொல்றன் என்று யோசிக்காதீங்க.....உண்மையில் ஒவ்வொருவரும் காதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறாங்க என்று சொல்ல வேண்டும். இயல்பாக வாழ்ந்திருக்கின்றார்கள். தமிழ் திரையுலகில் எல்லாருமே பாராட்டும் படமாக அமைந்திருக்கின்றது மைனா. படத்தில் நகைச் சுவைக்கும் குறைவில்லை. அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் மைனா

Positive Negative

உங்களைச் சூழ உள்ளவர்கள் எப்படியான சிந்தனை கொண்டவர்கள்???? பொசிடிவ் சிந்தனையா? அல்லது நெகட்டிவ் சிந்தனையா? இதுவும் உங்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.. இதோ அதற்கான சிறு கதை.....

ஒரு நாள் தவளைகள் சிலவற்றிற்கு தாம் வாழும் ஊரில் உள்ள கோயில் கோபுரத்தில் ஏற வேண்டும் என்ற ஆசை வந்ததாம். சரியென்று அந்த தவளைகள் எல்லாம் கோவில் அடிக்குச் சென்று ஏற முயற்சி செய்தனவாம். இதைப்பார்த்த அந்த கோவிலில் நின்ற மனிதர்கள் எல்லாம் சொன்னார்களாம், நீங்க தவளைகள் உங்களால் இதை செய்ய முடியுமா? உங்களுக்கு இது தேவைதானா? என்று. இருந்தாலும் தவளைகள் தங்களால் முடியும் என்று நினைத்து தத்தித்தத்தி தாவினவாம்... மீண்டும் .. மீண்டும் ...அங்கிருந்த மக்கள் நீங்கள் தவளைகள் உங்களால் இந்த கோபுரத்தில் ஏறமுடியாது....இந்த கோபுரத்தின் உயரமென்ன? உங்களின் அளவென்ன...இது உங்களால் முடியாது...தேவையில்லாமல் கஷ்டப்பட போறீங்கள்...என்று கூறிக்கொண்டே இருந்தார்களாம். தவளைகளும் முயற்சி செய்து பார்த்து பார்த்து மனிதர்கள் சொன்னதையும் யோசித்து தங்களால் இந்த உயரமான கோபுரத்தில் ஏறமுடியாது என்று எண்ணி முயற்சியை கைவிட்டு விட்டனவாம். ஆனால் ஒரு தவளை மட்டும் தத்தித் தத்தித் தாவி ஏறி ஏறி கோபுரத்தை அடைந்ததாம். என்னடா எப்படி அந்த தவளை மட்டும் சென்றடைந்தது என்று பார்தால் அந்த தவளைக்கு காது கேட்காதாம்!!!!! எனவே மனிதர்கள் சொன்ன வார்த்தைகள் ஒன்றும் அதற்கு விளங்கவில்லை. அது தன்னால் இலக்கை முயற்சித்து அடைந்து விட்டது. எனவே நாங்களும் எங்கள் இலக்கு என்ன என்பதை சரியாக தீர்மானித்து விட்டால் வேறு விடங்களினால் அதனை தடைப்படவிடாமல் பார்த்துக் கொண்டால் இலக்கு என்பது இலகு.

பழநிபாரதியின் காதலின் பின்கதவு

சினிமாவில் பாடல்களை எழுதும் கவிஞர் பழநிபாரதியின் காதலின் பின்கதவு என்ற கவிதைத் தொகுப்பை வாசித்த போது எல்லா கவிதைகளுமே சிறப்பாக காணப்பட்டன. அவற்றில் சில இதோ...

இசைத்தட்டின் ஞாபகத்தில்

கடிகாரத்தில் படுத்துக்கிடக்கும்

முட்கள் நாம்'

இன்று பிறந்த குழந்தைக்கு....

உனக்காக வைத்திருந்த

முத்தத்தில்

ஃப்ளோரைட் வாசம்....

உனக்காக பறத்த பூவில்

டீசல் தூசி...

உனக்காக வாங்கிய

வாழ்த்து அட்டையில்

மரத்தின் இரத்தம்....

எனது உலகத்திலிருந்து

எதுவுமில்லை உனக்கு....

காற்றை

அழுக்குப்படுத்தாமல் ஓடும்

உனது குட்டிக் கார்.....

வன்முறை அறியாத

இராணுவ வீரன்.....

சிரிக்க கற்றுக்கொடுக்கும்

சீனத் தங்கை....

விபத்துக்களைச் சந்திக்காத

விமானம்

ரயில்......

மதங்களற்ற

உனது பொம்மைகளின்

உலகத்திலிருந்து

முடிந்தால் கொடு

எனக்கொரு சிரிப்பை........

பழமொழி சொன்னா ஆராயக்கூடாது...... அனுபவிக்கோணும்....

வாழ்க்கையில் நாம் எல்லோருமே பழமொழிகளைக் கேட்டிருப்போம், வாசித்திருப்போம் அல்லது சொல்லியிருப்போம். ஆனால் தொடர்ச்சியாக ஒரு சில பழமொழிகள்தான் அடிக்கடி பாவிக்கப்படுகின்றன. எனவே சில பழமொழிகளை வாசிக்கும் போது வித்தியாசமாக பட்டது. சரியென்று வலைப்பதிவில் இட்டுவிட்டேன். இவற்றை வாசிக்கும் போது பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சொல்வது போல் பழமொழி சொன்னா ஆராயக்கூடாதுடா.. அனுபவிக்கோணும்...சரியா...



  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்க கெடும்

  • பசித்தவன் மேல் நம்பிக்கை வையாதே

  • கரும்பும் எள்ளும் கசக்கினால் பலனாகும்

  • வீணை கோணினாலும் நாதம் கோணுமா?

  • நின்ற மரத்தில் நெடுமரம் போனால் நின்ற மரம் நெடுமரம்

  • காற்றிலே அம்மி பறக்கும் போது இலவம் பஞ்சுக்கு எங்கே கதி

  • சான்றோர் கயவருக்குரையார் மறை (மறை- இரகசியம்)

  • அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்

  • உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டது போல

  • தன்னூருக்கு ஆனை அயலூருக்குப் பூனை

  • திருடின நெல்லுக்கு மத்தளம் மரக்கால்

  • அன்னைக்கு உதவாதவன் ஆருக்கும் உதவான்

  • இராசா வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் அம்மியை உடைத்ததாம்

  • கூரையேறி கோழி பிடிக்கமாட்டாத குருக்களா வானமேறி வைகுந்தம் காட்டுவார்?

  • எட்டாப் பூ தேவருக்கு எட்டும் பூ தங்களுக்கு

  • கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

  • ஆ வேறுருவினதாயினும் பால் வேறுருவினதாமோ?

  • பகுத்தறிவில்லாத அறிவு பாரமில்லாத கப்பல்

  • தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு

  • இலையின் வீழ்ச்சி வாழ்க்கையின் இரகசியம்


Nail Art

உங்களின் நகங்கள் எப்படி? நன்றாக நகம் வளர்த்து Shape செய்து Nail Polish  எல்லாம் அடித்து அழகுபடுத்தி வைத்திருக்கின்றீர்களா? ஆம் என்றால் ஓகே. இல்லை என்றால் இனிமேல் அவ்வாறு செய்து கொள்ளலாம். உங்களுக்கு Nail Polish அடிக்க விருப்பமில்லை என்றால் நீங்கள் நகத்தை மட்டும் அளவாக உங்களுக்கு பிடித்த அளவு வளர்த்து அதனை Shape செய்து அழகுபடுத்தலாம். இல்லை Nail Polish அடிப்பது பிடிக்கும் ஆனால் அதற்கு நேரமில்லை அல்லது வேலைமினக்கிட்ட வேலை என்று நினைத்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். மேற்கத்தேய நாடுகளில் எல்லாம் பார்த்தால் இந்த நகங்களுக்கு வித விதமாக Nail Polish அடித்து அதனை அழகு படுத்துவது என்பது Nail art எனப்படுகின்றது.

இந்த முறையில் சிறிய நகத்தில் மிக பெரிய அளவில் ஓவியம் வரையும் தன்மை அதிகரித்து விட்டது. அது மிக அழகாக இருக்கின்றது. சிலர்தான் தமக்கு பொருந்தாத வகையில் அதனை வரைந்து அதன் அழகை எரிச்சல் படவைத்து பார்க்கும் எங்களையும் இதெல்லாம் தேவைதானா என்று சிந்திக்க வைத்து விடுகின்றது. ஆனால் அழகான முறையில் Nail art செய்து பாருங்கள் மிக அழகாக இருக்கும். இதனை நாம் எமது வீட்டில் வைத்தே செய்ய முடியும். எம்மிடம் இருக்கும் Nail Polish கொண்டு நாம் அலங்காரப்படுத்த முடியும். இது எமது கற்பனையில் தான் இருக்கின்றது. இதகான் Tools எம்மிடம் இருந்தால் எமது கற்பனைக்குதிரையை தட்டி விடவேண்டியதுதான். அவ்வாறு Tools  இல்லை எனினும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை எம்மிடம் இருக்கும் Brush வகைகளை கொண்டு அதற்கேற்ப நகங்களை அழகு படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் Tooth pick கொண்டும் அழகுபடுத்த முடியும். இவை எல்லாவற்றிற்கும் முக்கியம் முயற்சி, பொறுமை, கற்பனை வளம்.





Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில் இருக்கும் .அநேகமானோர் அதனையே கடைப்பிடிக்கின்றோம். சிலர் காலத்திற்கு ஏற்றவாறு Fashion ல் பின்னியெடுத்துடுவாங்க. ஆனா சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் இதுதான் Fashion என்று கூறிக்கொண்டு Fashion யும் கெடுத்து தங்களையும் கெடுத்து வைத்திருப்பார்கள். சரி இதில் நீங்க எப்படி... பின்னியெடுக்கிற வகையா இல்லை கெடுக்கிற வகையா?

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பார்த்தால் தங்க நகைளை விரும்பி அணிவதை விட பெண்கள் அதிகமாக Fancy நகைகளையே விரும்பி அணிகின்றனர். இதற்கு முக்கிய காரணம் செலவு குறைவு. ஆடைகளுக்கு ஏற்ற விதத்திலே கலர் கலரா நகைகள் அணியலாம். அதிலும் பல விதமான Fancy நகைகள் இருக்கின்றன. மற்றும் கள்வர் பயமில்லை, போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
Black Fancy Saree

Sequine worked Black Saree

இவ்வாறே புடவைகளிலும் இப்பொழுது Fancy புடவைகளுக்கு மவுசு அதிகம். Stone வேலைப்பாடு, String வேலைப்பாடு, Patch வேலைப்பாடு, Beads வேலைப்பாடு, Gliter வேலைப்பாடு, Cord வேலைப்பாடு, கண்ணாடி வேலைப்பாடு, Sequine வேலைப்பாடு , Net வேலைப்பாடு போன்ற பல வகைகள் இருக்கின்றன.
Designer work in pattu saree

எவை எப்படி அழகான பொருட்களாக இருந்தாலும் கூட எமக்கு எது பொருந்துமோ அதனை தெரிவு செய்ய எமக்கு தெரிய வேண்டும் . அல்லாவிட்டால் எவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாம் அணிந்திருந்தாலும் அழகாக தெரிய மாட்டோம். எனவே Fashion என்பது எமக்கு பொருந்துகின்றதா என்று பார்த்து நாம் கைக்கொண்டால் எமது அழகை அது பன்மடங்காக்கி விடும்.

சுறா

விஜயின் 50வது திடைப்படம் சுறா. 50வது திடைப்படம் என்றவுடன் எதிர்பார்ப்பு வைத்தது எமது பிழை . என்ன நினைத்து படம் எடுக்கின்றார்களோ தெரியவில்லை . விஜய் நடித்தால் படம் ஓடும் என்று நம்பி எத்தனை நாளுக்குத்தான் படம் எடுப்பார்களோ ?

பொதுவாக நல்ல படங்கள் வருவதை விஜய் போன்ற நடிகர்கள் கவனிப்பதில்லையா..... இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றார்களா....கதாநாயகன் என்றால் என்ன என்றாவது தெரியுமா ......

மொத்தத்தில் சுறா படத்தில் "வடிவேல் மட்டும் இல்லையென்றால் சுறாவை பூனை தூக்கிக்கொண்டு போயிருக்கும்" வடிவேலும் எவ்வளவுக்குத்தான் தாக்குப்பிடிப்பது ..... அது தான் சுறாவை பூனை தூக்காமல் இருக்க ரசிகர்கள் பால் பாலா வார்க்கிறார்களோ என்னவோ ......

நதி


நதி எங்கே போகிறது கடலைத் தேடி....என்ற வரி எமது வாழ்வில் குறிக்கோளின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. எப்போதும் நதி போல் இருக்க வேண்டும். நதியின் செயற்பாட்டைப் பார்த்தால், அதன் இலக்கு கடலைச்சென்றடைவதுதான். நதி கடலைச்சென்றடையும் வரை என்னென்ன தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து கடலைச் சென்றடைகின்றது.. அந்நதி எவ்வாறு தனது குறிக்கோளில் கவனமாக இருந்து இலக்கை அடைகின்றது. இலகு பொருட்களை  அடித்துச் சென்றுவிடுகின்றது, வலிமையன பொருட்கள் எனின் அதைவிட்டு விலகி வளைந்தோடுகின்றது அல்லது மேவிப்பாய்கின்றது. இது எமது இலட்சியங்களை அடைவதற்கு எடுத்துக்காட்டு. அதேவேளை செல்லும் வழியில் தன்னால் இயன்ற உதவிகளை எல்லோருக்கும் வழங்கிச் செல்கின்றது. அத்தோடு தன்னுள் பல உயிரினங்களையும் வாழ வைக்கின்றது. அதுபோலவே நாமும் இலக்கை அடையும் மட்டும் முயற்சி செய்து நம்மால் இயன்ற நன்மைகளையும மற்றவர்களுக்கு செய்தால் வாழ்வு செழுமையாக அமையும்

ஆப்பு வைச்சுப்புட்டாங்க அண்ணே


இன்றைய மனிதர்களின் மூன்றாவது கைக்கு அதுதாங்க.. Cell Phone களால் அதிக கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அது உடம்புக்கு கேடு விளைவிப்பதாகவும் அவ்வப்போது அறிக்கைகள் வரும், உடனே Cell Phone Company குய்யோ முய்யோ என்று கத்தி அவ்வாறு இல்லை என்று வாதாடுவதேடு, Court Case என்று கொஞ்ச நாள் சலசலப்பை உண்டாக்கி பின்னர் புஸ்வாணமாகி விடுகின்றது.

இப்ப என்னாண்ணா அமெரிக்காவை சேர்ந்த இவங்க Environmental Working Group (இவங்களுக்கு என்ன கொலை வெறியோ...)சொல்றாங்க படத்தில இருக்கின்ற பய புள்ளைங்க Dangers பார்ட்டியாம்... பய புள்ளையளுக்கு சனி மாற்றம் சரியில்ல போல..


Ordered by tech expert rank. View by radiation level


நாட்டாமை Please STOP ப்பு

நல்லா கெளப்புறாரு பீதிய....

நடிக்க வந்ததிலிருந்தே ஒஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. (நல்லா கனவு காணுங்க யாரு வேணாண்ணு சொன்னது)

எப்படியாவது ஒஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று. (நல்லா தேர்ந்தெடுங்க 1977, ஜக்குபாய் மாதிரி)

நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.

இப்போது நான் பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் (முதல்ல வாய்ப்பு வரட்டும்) பண்ணுவேன். நிச்சயம் ஒஸ்கர் வெல்வேன்.... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா........

ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஒஸ்கர் வெல்லலாம்.

Mr நாட்டாமை Please STOP ப்பு...இதென்ன சின்னப்புள்ளத்தமா இருக்கு....

ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் Hollywood படம் ஒன்றில அமெரிக்க காரன விட திறைமைசாலியா Perform பண்ணி ஒஸ்கார் வாங்கியிருக்காங்க, ஆனா நீங்க என்னடான்னா.. ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் அந்த விருதினை கொடுக்கிற மாதிரியும், ஏதோ பொடி நடையாபோய் அந்த விருத வாங்கிட்டு வாற மாதிரியும் கத விடுறீங்க....

ஒஸ்கார் அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கன் கொடுக்கிற விருது... இதத்தான் கமல் காலா காலமா செல்லிக் கொண்டு வாறாரு... இந்திய படங்களுக்கு பெரிய விருது, இந்திய தேசிய விருது அத முதல்ல வாங்க try பண்ணலாமே...

ஏப்பு தரைய விட்டுப்புட்டு ஆகாயத்தில போய் விவசாயம் பண்ண கணவு கண்டுக்கிட்டு... எங்களுக்கும் பீதிய கௌப்புறீங்க.....

Mr Sarath you are a good and handsome hero.... mean time don't imagine un wanted things.....

Chocolate ரே Box சா இருந்தா எப்புடி

Box க்குள்ள Chocolate இருக்கலாம் ஆனா Chocolate ரே Box சா இருந்தா எப்புடி..

தம்பிக்கு நொந்த ஊரு

தம்பிக்கு எந்த ஊரு



ஐயோ என்ன காப்பாத்துங்க





ஐயோ காப்பாத்துங்க


ஐயோ என்ன காப்பாத்துங்க





ஐயோ என்ன காப்பாத்துங்க


ஐயோ என்ன காப்பாத்துங்கங்ங்ங்ங்.........

என்ன மூச்சு பேச்ச காணல்ல..... முடிஞ்சு போச்சா....



என்பா தம்பிக்கு நொந்த ஊரு பார்த்துட்டு மட்சுக்கு வந்தநீ....

படத்துல ட்விஸ்ட் இருக்கும், ஆனா ட்விஸ்ட்ல பார்த்த படம் என்றா இது தாண்ட சாமி

நிச்சயம் தம்பிக்கு நொந்த ஊரு தாண்டியோவ்....

சுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு

மகளீர் இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதியின் கணக்கு ....
இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. (ஆரம்பிச்சிட்டாரு)  இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. (நமக்கு என்றா அவருக்கு) மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் (ஆக்கா கணக்கு பண்ணிட்டாரு) என்று கூறியுள்ளார் முதல்வர்.

இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி ( ஏன்பா இலங்கை பிரச்சின முடிஞ்சு போச்சு எண்டு யாரவது சொல்லுங்கப்பா, மனுஷன் தந்தி அடிக்கிறதா நிப்பாட்டட்டும் ) அனுப்பியுள்ளார்.

இப்ப என்னடாண்டடா குடும்பத்துக்கு எத்தனை சுளை தேவைப்படும் என்று நீங்களே கணக்கு பாருங்க...


உலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா




ஒவ்வொரு குழந்தையையும் பத்து மாதம் கருவறையில் சுமந்து, இவ் உலகத்தைப் காட்டுபவள் தாய் என்னும் பெண்

sivany.blogspot.com உலக பெண்களுக்கு தனது அனைத்துலக பெண்கள் தின வாழ்த்துக்களைச் தெரிவித்துக் கொள்கின்றது.

இன்றைய இந்த தினத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தவை....

கதரின் பிக்லோ, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார் .



ஒஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்ற முதல் பெண் கதரின் பிக்லோதான் என்பது, பெண்கள் தினமான இன்று அனைத்து பெண்களையும் பெருமைப்படுத்தும் ஓர் விடயமாகும்.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், அவை தி ஹர்ட் லொக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

இதேவேளை, ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் விருது கிடைக்காத அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது! (நீங்கதானே முன்ன சொன்னீங்க கதரீன் விருதுக்கு பெருத்தமான நபர் தான் என்று... இப்ப என்ன...பெருமைப்படுங்க உங்க முன்னாள் மனைவியும் இன்னாள் நன்பியும் தானே..)

அடுத்தது...

முற்று முழுதாக பெண்களால் இயக்கப்பட்ட விமானமொன்று இன்றைய தினம் சென்னையிலிருந்து கொழும்பிற்குப் பறந்து வரலாற்றில் சிறப்பு பதிவை மேற்கொண்டுள்ளது.

பிரதான விமானி தீபா மேத்தா, உதவி விமானி சோனியா ஜெயின், பணிப்பெண்கள் ராஜானி, பிருந்தா, தன்யா பிரசன்னா, யாமினி ஆகியோரடங்கிய இந்தக் குழுவினர் இன்று மதியம் 12. 30இற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை இயக்கியதாகவும் இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

சற்று ஏமாற்றமான விஷயம்.....


சர்வதேச மகளிர் தினமான இன்று இந்தியாவில் பெண்களுக்கு 33.33 வீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்நது. இருந்தாலும் அது பல குழப்பங்களுக்கு மத்தியில் அதற்கான வாகெடுப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்தி... (இருக்காதா பின்ன)

82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)

82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)

Kathryn Bigelow (James Cameroon's ex wife) இன் The Hurt Locker சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட, 6 ஒஸ்கார் விருதுகளைப்பெற்றுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கு ஒஸ்கார் விருது பெறும் முதல் பெண்ணாக Kathryn Bigelow தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Best Picture
Movie: The Hurt Locker
Kathryn Bigelow, Mark Boal, Nicolas Chartier and Greg Shapiro


Actor in a Leading Role

Jeff Bridges

Movie: Crazy Heart



Actor in a Supporting Role

Christoph Waltz

Movie: Inglourious Basterds



Actress in a Leading Role

Sandra Bullock
Movie:The Blind Side


Actress in a Supporting Role

Mo'Nique

Movie: Precious: Based on the Novel 'Push' by Sapphire


Animated Film Feature

Movie: Up

Pete Docter
Art Direction

Movie: Avatar

Rick Carter and Robert Stromberg (Art Direction); Kim Sinclair (Set Decoration)
Cinematography

Movie: Avatar

Mauro Fiore
Costume Design

Movie: The Young Victoria
Sandy Powell


Directing

Movie: The Hurt Locker
Kathryn Bigelow


96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி

96ல் ஓர் அணியில் விளையாடி உலகக்கிண்ணத்தை வெண்ற அணி, 2010 இல் எதிர் எதிர் அணியில் களம் இறங்கியுள்ளது.

நீயா நானா?



அதுதான், 96ல் கிரிகற் உலகக்கிண்ணம் வென்ற அணியில் அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜயசூரிய, ஹசான் திலகரட்ண ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



நானும் இருக்கேன், எப்பிடியெல்லாம் ஆடுவன் பாரு..


இப்பஇ 2010 இல் சனத் ஆளும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் குதித்துள்ளார் (நீங்கள் குதித்த அந்த குளம் ஆழமுங்களாண்னா) அர்ஜூனா, ஹசான் ஆகியோர் சரத் பொன்சேகாவுடன் இணைந்துள்ளனர்.

இதுல வெல்லப்போறது யாரு? போர்ம்மே இல்லாவிட்டாலும் அணியில் தொடர்ந்து இருக்கும், இனிமேலும் தொடர்ந்து இருக்கப்போகும் சனத்தா? இல்ல வெற்றி பெறாமலே வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடும் அர்ஜூனா, ஹசானா?...

இப்படியும் வணக்கம் சொல்லலாம்



இது எங்க ஏரியா... அர்ஜூனா Bowling சனத் Batting ஹசான் Keeper, ஒருவேளை சனத் Ball Miss பண்ணினா Stump ல Out ஆ

இதெல்லாம் ஜெயிச்ச பிறகு ராஜா...

பயபுள்ளய்க கவுத்துப்புட்டாய்க


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More