Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

பாட்டி வைத்தியம்

இன்றைய காலகட்டத்தில் நாம் எதற்கெடுத்தாலும் வைத்தியசாலையை நாடி ஒடுகின்றோம். அது தவறல்ல.. ஆனால் எம் முன்னோர்கள் மூலம் பழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் சில் கைவைத்திய முறைகளை நாம் கடைப்பிடித்துப் பார்த்தால் சில வேளைகளில் வைத்திய செலவைக் குறைத்துக் கொள்வதுடன் பக்கவிளைவற்ற மருந்துகளையும் நாம் உட்கொள்ளலாம்.

இதோ சில அனுபவ வீட்டு வைத்திய முறைகள்......

சிலருக்குப் பார்த்தால் தலையிடி ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். அப்படியாயின் அடிக்கடி மாத்திரைகளை உட்கொள்ளாமல் , வேர்க்கொம்பு தெரியும் தானே அந்த வேர்க்கொம்பு பவுடரை எடுத்து அத்தோடு தேசிப்புளி கலந்து பசைபோன்று வந்தவுடன் அதனை நெற்றியில் நன்றாக பரப்பி பூசி விடவும். பின்பு நெற்றியில் பூசிய வேர்க்கொம்பு காய்ந்தவுடன் நீங்களே தலைவலி போயிருப்பதை உணருவீர்கள்.

இருமல், சளி என்பன வந்து விட்டால் வெற்றிலை எடுத்து சிறிது நெருப்பில் வாட்டி இளஞ் சூடாக அந்த வெற்றிலை மீது விக்ஸ் பூசி நெஞ்சில் வைத்தால் அந்த வெற்றிலை நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும். இப்படி தொடர்ந்து நாளுக்கு ஒருதரம் செய்து வந்தால் சளி குறைவதை உணரலாம்.

மேலும் பசும் பாலில் சிறிது முழு மிளகு போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்பு சிறிது கறிமஞ்சள் போட்டு சூடாற விட்டு இளஞ்சூடாக குடித்தால் இருமல் குறையும்.

சிறிதளவு தேனுடன் சுடுதண்ணீர் கலந்து சிறிது கற்கண்டும் போட்டு குடித்தால் சளி குறைவடையும்.

தொண்டை கட்டினாலோ அல்லது தொண்டை நொந்தாலோ நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் பூசி வந்தால் சுகம் வரும்.

என்ன? இதில் உள்ளதெல்லாம் இலகுவானது தானே...... Try  பண்ணிப் பாருங்க...

சமையல்



இந்தக் காலத்தில் அநேகமானவர்களுக்குப் பிடித்த உணவுவகைகள் எவை என்று கேட்டால் அதற்கு கிடைக்கும் பதில்கள் பொதுவாக Chinese Foods, Thai Foods, Mongolian Foods, Italian Foods என்று மேற்கத்தேய உணவுவகைகள் தான் அதிகம் இடம்பிடிப்பதை நாம் பார்க்கலாம். அவர்களின் உணவுகளில் உணவுச் சேர்க்கைகள் என்பது எம்மிலிருந்து வேறுபட்டு நிப்பதை நாம் பாரக்கலாம். கீழத்தேய உணவுகளில் நாம் ஒரு மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படும் ஏதாவது ஒரு சாப்பாட்டுடன் கறி, சம்பல், போன்ற தொட்டுச் சாப்பிடும் வகைகளை வைத்திருப்போம். ஆனால் நாங்களும் நாளுக்கு நாள் வித்தியாசமான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். அவ்வாறு தான் நானும் ஒரு வகை Dish முயற்சி செய்து பார்த்தேன் ..நன்றாக இருந்தது..நீங்களும் விரும்பினால் Try பண்ணிப்பாருங்க.



தேவையான பொருட்கள்

கரட் 1

வதக்கிய இறைச்சி சிறிதளவு

வறுத்த கச்சான்

தேங்காய்ப்பூ

அளவான பெரிய வெங்காயம் 1

பச்சைமிளகாய் 3

உப்பு

செய்முறை
முதலில் கோழி இறைச்சியை சிறிய துண்டுகளாக 10 அல்லது 15   துண்டுகள் அளவில் எடுத்து நன்கு மஞ்சள், கறித்தூள் , உப்பு, என்பன போட்டு பிரட்டி வைத்து பின்பு தாய்ச்சியில் எண்ணை சிறிதளவு விட்டு வதங்க விடவேண்டும் . நன்றாக இறைச்சியின் மணம் போகும் மட்டும் நன்றாக வதங்கி, பொரிந்தவுடன் உள்ளங்கையளவு வறுத்த கச்சான் எடுத்து அதனை வதங்கிய இறைச்சியினுள் இட்டு மேலும் வதங்கவிடவேண்டும். அதன் பின்பு Scrape பண்ணிய கரட்டையும் சிறிதாக வெட்டிய பச்சைமிளகாயையுமும் கலந்து வதங்க விடவேண்டும் . அதன்பின்பு சிறிதாக வெட்டிய வெங்கயாம் தேங்காய் பூ என்பனவற்றையும் இட்டு Mix பண்ணி உப்பும் சரியா என்று பார்த்து நன்றாக வதங்கியபின்பு அடுப்பிலிருந்து இறக்கி எமது உணவுடன் Side dish ஆக சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும். Try பண்ணிப் பாருங்க.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More