Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

ஆயர்பாடி மாளிகையில்...


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

மன உளைச்சலைப் போக்கும் வழிகள்



பம்பரமாக சுழன்றுகொண்டிருக்கும் இந்த உலகில் பலரும் மன உளைச்சலால் அவதிப்படுகின்றனர். இது பள்ளி செல்லும் குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது.  எனவே அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்கலாம்

மனவுளைச்சலைப் போக்கும் விளையாட்டு
பெரியவராய் இருந்தாலும் சரி சிறுவராய் இருந்தாலும் சரி விளையாட்டு எம்மை மனவுளைச்சலிலிருந்து விடுபடவைக்கும். வயது வித்தியாசமின்றி நீங்கள் விளையாடலாம், அதுவும் பெற்றோர்களாக இருந்தால் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடிப் பொழுதை உற்சாகமானதாக்கலாம்.

புத்தகங்கள் வாசித்தல்
நல்ல புத்தகங்கள் நல்ல நண்பன் போன்றவை. எனவே அவற்றை வாசிக்கும் போது மனம் ஒருநிலைப் படுகின்றது, அதேவேளை புதிய விடயங்களும் எம்மை வந்தடைகின்றன.

மனம் விட்டுச் சிரித்தல்
சிரிப்பு மனிதனுக்கு அவசியம். மிருகங்களில் இருந்து நம்மை வேறுபடுத்துவது இந்தச் சிரிப்பு. மனம் விட்டுச் சிரிக்கும் போது உடல் ஆரோக்கியம் அடைகின்றது. மற்றவர்களுடன் நகைச்சுவையைக் கூறி மனம் விட்டுச் சிரிக்கும் போது அவர்களுடன் பிணைப்பும் அதிகரிக்கின்றது.

வீட்டுத் தோட்டம் 
மரங்களை நட்டு அவற்றை வளர்ககும் போது நாம் இயற்கையுடன் ஒன்றிப் போகின்றோம். பூந்தோட்டம் மூலம் மனம் அமைதியடைகின்றது.

வரைதல்
சித்திரம் , ஓவியம் வரைதல் சிறந்த மனதை ஒருநிலைப்படுத்தும் விடயம் . எங்களின் திறமையும் உணர்வுகளும் இதன் மூலம் வெளிப்படும் . 

இசை
இசையால் வசமாகா இதயமெது என்பதற்கிணங்க மனதை லயிக்கச் செய்வது இசை. மருத்துவர்களே கூறுவதைக் கேட்டிருப்போம்..நல்ல இசையை கேளுங்க மனதிற்கு நல்லம் என்று. இசை மிகப்பெரிய சக்தி வாய்ந்தது.

சிறிய சுற்றுலா
வெளியில் சுற்றுலா சென்று வருவது மனஉளைச்சலைத் தவிர்க்கும் . அதற்காக அதிக செலவு செய்து சென்றால் அந்த பணமே மேலும் மனவுளைச்சலை ஏற்படுத்திவிடும். எனவே எம்மிடம் இருக்கும் வசதிக்கேற்ப சுற்றுலா செல்வது மன அமைதியையும் அன்னியோனத்தையும் தரும்.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து இது பழமொழி. இதற்குப் பல விளக்கங்கள் கூறுவார்கள். ஆனால் அதன் அர்த்தம் இவ்வாறு அமைகிறது, பந்திக்கு முந்து என்றால் ஒரு விருந்தில் முதல் பந்தி முக்கியமான, மதிப்பிற்குரியவரிகளுக்கே அளிக்கப்படும் , எனவே நீ அவ்வாறு சிறப்பு மிக்கவனாக இருக்க வேண்டும். அதேவேளை படைக்குப் பிந்து என்றால் எப்போதும் பெரிய படைத்தலைவர்கள் கடைசியாக தங்களை துருப்புச் சீட்டாகவைத்து போருக்குச் செல்வார்கள் . அதுபோல் நீயும் பெரியவனாய் இரு என்பது இதன் பொருள். எனவே இந்தப் பழமொழியின் கரு என்ன என்று பார்த்தால் எங்கும் சிறப்பிற்குரியராகவும், மதிப்பிற்குரியவராகவும் இரு என்பதாகும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More