Saree Blouses

Some beautiful saree blouses

Christian Bridal Dress

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.

SIVANY Designer Sarees

Designer Sarees

Indian Fashion Dress

பெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....

Fashion

Fashion என்பது என்ன? ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்

பம்மி பூ

 என் அப்பா ஒரு பொறியியலாளர், அதனால் அப்பாவின் வேலை இடமாற்றங்களுக்கு ஏற்ப குடும்பமாகவே இடமாறித்திரிந்தோம். இதனால் யாழிலிருந்து எனது ஒரு வயதில் முதலில் சென்ற இடம் கல்முனை. 

அங்கு அப்பாவுக்காக ஒதுக்கப்பட்ட வதிவிடம்  மிக மிக பெரியது. ஆனால் அந்த வீட்டை பற்றியதல்ல  இந்தப்பதிவு.  அந்த வீட்டோடு நின்ற பம்மி மரமும் அதன் பூவும்தான்.  அந்த மரத்தில் அப்படியோர் ஈர்ப்பு எனக்கு.  

பெரிய உயரமான மரம். ஆனால் தேசிப்பழம் அளவு பந்து போன்ற மஞ்சள் நிற அழகான பூ. சிறு வயது முதலே விரும்பிய அந்த மரத்தை மட்டக்களப்பு, திருகோணமலை என்று இடமாறிச்சென்ற இடங்களில் காணக்கிடைக்கவில்லை.  பின்பு மீணடும் கல்முனைக்கு சென்ற வேளையில் பம்மி பூவைப் பார்த்தது மட்டும்தான். 

பின்பு நீண்ட காலத்துக்குப் பின்னர் இணையத்தில் இந்தப் பூவைப் பற்றி தேடத்தொடங்கினேன். அந்தப் பெயரில் கிடைக்கவில்லை  ஆனால் மஞ்சள் நிறப் பூக்கள் என்று தேடி படங்கள் வழியாக ஒருவாறு பூவைக்கண்டுபிடித்த்துப் பாராத்தால் அதன் பெயர் கடம்ப மலர்.

கீழ் வரும் தரவு விக்கிபீடியாவிலிருந்து பெறப்பட்டது. நன்றி விக்கிப்பீடியா. 

கடம்பு என்பது (Neolamarckia cadamba மற்றும் Anthocephalus indicusAnthocephalus Cadamba)[1] தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மாறாப் பசுமையானவெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[2] இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத்தேவைகளுக்கான மரம் மற்றும் காகித தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.[2][3]

இந்திய மதங்கள் மற்றும் புராணங்களில் கடம்பு பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன.

கடம்பமரம் முருகனுக்கும்திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சிபட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.

சங்கப்பாடல் குறிப்புகள்தொகு

  • கடம்பு புலவர் போற்றும் மரம்.[8]
  • நீர்வளப் பகுதியில் கடம்பு செழித்து வளரும்.[9]
  • அருவி ஆடிய மகளிரில் ஒருத்தி கடம்பமரத்தைப் பற்றிக்கொள்ள மற்றவர்கள் அவளது கையைப் பற்றிக்கொண்டு நீராடினர்.[10]
  • கடம்பின் மலர்க்கொத்து உருண்டு இருக்கும் [11]
  • கடம்பு காடைப் பறவை போல் பூக்கும்.[12]
  • தெய்வம் முருகப்பெருமானைக் கடம்பமர் நெடுவேள் என்பர்.[13][14][15][16][17],[18]
  • முருகன் திருவிழாவின்போது கடம்ப மரத்தில் கொடி கட்டுவர். கடம்பு கொடி யாத்து, கண்ணி சூடி, (முருகயர்வர்).[19]
  • முருகனுக்குக் கடம்பின் இலைகளால் தொடுத்த மாலை போடுவர். கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - புறம் 23-3
  • கடம்பன் என்னும் சொல் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால்வகை முதுகுடிகளில் ஒன்று.[20]
  • வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் கடப்பமலர் அணிந்திருப்பான்.[21]
  • குறமகள் முருகாற்றுப்படுக்கும் இடங்களில் ஒன்று [22]
  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாரன் பகைவனின் கடம்ப-மரத்தை வெட்டி முரசு செய்துகொண்டான்.[23]
  • களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை அதித்தான்.[24]
  • ஆலமரம், கடம்பு, ஆற்றுநடுத் தீவு (திருவரங்கம்), (இருங்)குன்றம் ஆகிய இடங்களில் திருமால் குடிகொண்டுள்ளான்.

கடம்ப மரமும், மதுரையும்தொகு

முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[26] இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று.



பனங்காய்ப் பலகாரம்

வழமையாக  பனங்களியுடன் கோதுமை மாவைக் கலந்து பனங்காய்ப் பலகாரம் செய்வோம். ஆனால் இன்று ஆட்டா மா கலந்து  எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பனங்களி                      3/4 கப்
ஆட்டா மா                       3/4 கப்
கோதுமை மா               3/4 கப்
பால்                                 1/2 கப்
சீனி  (Brown)                 1/2 கப்
தண்ணீர்                       1/4 கப்
Baking powder                1/4 tsp
உப்பு                                2 சிட்டிகை(pinch)


செய்முறை:
மாவுடன் baking powder மற்றும் உப்புக் கலந்து விட்டு, பனங்காய்ப் பாணியுடன் சீனியைச் சேர்த்து நன்றாக கரைக்கவும். நன்கு கரைவதற்காக  தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளவும். பின் இந்த கலவையை சிறிது சிறிதாக மாவுடன் கலந்து பிசைந்து கொள்ளவும்.  இந்நேரத்தில் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டதன் பின்பு, மிதமான சூட்டில் கொதித்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பனங்காய்ப் பலகாரம் தயார்.







இலையிலே கலைவண்ணம்


கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது பாடல். அது போல இதனை இலையிலே கலைவண்ணம் கண்டான் எனப் பாடலாம். ஒவ்வொருவரின் சிந்தனை ,புத்தாக்கத் திறன் என்பவை எவ்வளவு வித்தயாசப்படுகின்றன. இதிலுள்ள சாதாணமாக நாம் பார்ககும் இலைகள் எவ்வளவு அழகான  உயிரினங்களாக மாறியுள்ளன. அழகு.









படைப்புக்கள் பலவிதம் - Kristina Webb


இந்தப் படங்களைப் பார்க்கும் போதே மிகவும் அழகாக இருக்குதே யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற கூகிளில் தேடும் போதுதான் இந்தப் படைப்பாளி பற்றிய தகவல்களை அறியக் கிடைத்தது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா வெப் என்பவர் தான் அந்தக் கலைஞர். இன்ஸ்டகிராமில் தனது அழகான இந்த படைப்புக்களை இடுவதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இவரைப் பின்தொடர்கின்றனர். அத்தோடு இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் பற்றிய மேலதிக விபரங்களை அவரின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.





Creative Idea

சில விடயங்களைப் பார்க்கும் போதுதான் "அட" என்ற எண்ணத்தை எம்முள் ஏற்படுத்தும். அதுவும் நாளார்ந்தம் நாம் பார்க்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை வேறு விடயங்களில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால்  ஏன் இந்த Idea எல்லாம் எமக்கு வரவில்லை என்ற கேள்வி மனதினுள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கே தரப்படும் படங்களைப் பார்த்தால் எமக்குள் அந்தக் கேள்வி எழுவது நிச்சயம்.












டுட்டு ஆடை - Tutu Dress


தையற்கலை என்பது எல்லோராலும் செய்ய முடியாதது. ஆனால் சிலருக்கு அது கைவந்த கலை. ஐய்யையோ எனக்கு தைக்க வராதே என்பவர்களும் முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஒரு முறை டுட்டு (Tutu)ஆடை வடிவமைக்கும் முறை. தையல் வாடையே படாமல் கோர்த்துக் கட்டுவது மற்றும் ஒட்டுவது ஆகிய முறைகளின் மூலம் இந்த வகை ஆடைகளை உருவாக்கலாம். ஆனால் உங்களுக்கு கற்பனைத்திறன், நிறங்களின் ஒத்திசைவு, பொறுமை, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் . அவ்வாறாயின் இந்த டுட்டு ஆடைமுறை உங்களுக்கு கைவந்த கலைதான்.








தமிழில் ஆண்டு நிறைவு - Anniversary


பொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர விழா என்றும், 75 வது பவள விழா என்றும், 100  வது நூற்றாண்டு விழா என்றும் கூறுவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இவற்றுக்கு இடையில்  நாம் வழமையாக பாவிக்க பல ஆண்டு நிறைவுப் பெயர்கள் உண்டு. அவை என்ன என்று பார்க்கலாமா?
1 ஆண்டு – காகித விழா
2 ஆண்டு – பருத்தி விழா
3 ஆண்டு – தோல் விழா
4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு – மர விழா
6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு – வெண்கல விழா
9 ஆண்டு – மண் கலச விழா
10 ஆண்டு – தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு – எஃகு விழா
12 ஆண்டு – லினன் விழா
13 ஆண்டு – பின்னல் விழா
14 ஆண்டு – தந்த விழா
15 ஆண்டு – படிக விழா
20 ஆண்டு – பீங்கான் விழா
25 ஆண்டு – வெள்ளி விழா
30 ஆண்டு – முத்து விழா
40 ஆண்டு – மாணிக்க விழா
50 ஆண்டு – பொன் விழா
60 ஆண்டு – வைர விழா
75 ஆண்டு – பவள விழா
80 ஆண்டு - அமுத விழா
100 ஆண்டு – நூற்றாண்டு விழா

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More